Friday, June 26, 2015

பெருந்திரள் முறையீடு இயக்கம்



அன்பிற்கினிய தோழர்களே வணக்கம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மிகுந்த பணிச்சுமைகளுடன் ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்துறையில் அமுல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும், எத்தகைய புள்ளிவிபரங்களாக இருந்தாலும், எத்தகைய கணக்கெடுப்பாக இருந்தாலும் ஊராட்சி செயலாளர்கள் மூலமாகவே முடிகிறது. முழு நேர பணியாளர்களை காட்டிலும் அதிக நேரம் பணிபுரிபவர்களாக உள்ள ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் என்ற பெயரில் குறைவான ஊதியத்தை வழங்கி உழைப்பு சுரண்டல் நடத்தி வருகிறது அரசு.
இந்நிலையில் தமிழக அரசு 17.03.2015 பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளர்களின் ஊதிய விகித மாற்றம் மற்றும் கருணை அடிப்படை பணி நியமனம் குறித்த அரசாணையினை உடன் பிறப்பிக்க கோரி சென்னை இயக்குநரகம் முன்பு 03.07.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடை பெற உள்ள பெருந்திரள் முறையீடு இயக்கத்தை வெற்றியாக்கிட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரையும் அறைகூவி அழைக்கின்றோம்.

“சுருண்டு கிடந்தால் சிலந்தி வளையும் சிறைதான்
விருண்டு எழுந்தால் சீனப் பெருஞ்சுவரும் ஓரடிதான்”
                -எழுவோம் தோழர்களே !