Friday, July 16, 2010

முதன்மைச் செயளர் மாற்றம்

         நமது துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த திரு.கே.அசோக் வரதன் ஷெட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த ஆணையர் மற்றும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலராக பணியாற்றி வந்த திரு.கே.அலாவுதீன் நமது துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Saturday, July 10, 2010

ஊராட்சி உதவியாளர்களின் முதுநிலைப் பட்டியல்

தோழர்களே!
திருப்பூர் மாவட்ட ஊராட்சி உதவியாளர்களின் முதுநிலைப் பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து ஏதேனும் தவறுகள் இருப்பின் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக தங்களது ஆட்சேபனையை கடிதம் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் நமது நிர்வாகிகளை அனுகுமாறு மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, July 6, 2010

07.07.2010 அலுவலக வெளிநடப்பு

தோழர்களே!
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் மரணத்திற்கு காரணமான திட்ட அலுவலர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இடமாறுதல் என்று பெயரளவில் கண்துடைப்பு வேலை செய்து திட்ட அலுவலர் சுமதியின் செயலிற்கு துணை நிற்கும் நமது துறை முதன்மை செயளர் அசோக் வர்தன் ஷெட்டி-யை கண்டித்து மாநில மையத்தின் முடிவுப்படி 07.07.2010 மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நமது ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் வெளிநடப்பு போராட்டம் செய்ய அனைவரையும் மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.